Friday, December 23, 2011

Wednesday, December 21, 2011

Latest Google Easter egg

"Let it snow" 

Google has a long history of fun Easter eggs, even when "Easter" is pretty far away. Before "let it snow", the most recent was "do a barrel roll", a surprise based upon the nerdy Star Fox-inspired Internet meme. Entering the phrase into Google causes the results page to do a rather impressive 360* roll before your very eyes. Here are some other great Google Easter eggs:
Gravity: Type Google Gravity and click "I'm feeling lucky" to observe Google collapse before your very eyes.
Askew: Type in tilt or askew and Google will slant your search results in an interesting way.
ASCII: Type in ascii art and Google will change its look to match your search criteria.
Alternative languages: Google doesn't discriminate. They kindly provide search services in such important languages at Klingon, Pirate and more.
Anagram: Searching for anagram causes Google to suggest "nag a ram"
Recursion: Searching for recursion causes Google to suggest "recursion" once again, for good measure
The Loneliest number: It's 1, of course
The answer to the universe: Search "the answer to the ultimate question of life, the universe, and everything "

Thursday, December 15, 2011

சச்சின் & சேவக்


கடந்த 2010ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான குவாலியரில் சச்சின் இரட்டை 


சதம் அடித்த போட்டியில், இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 


பெற்றது. இந்தூர் போட்டியில் சேவக், 219 ரன்கள் எடுத்த போதும், இந்திய அணி 


153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது அபூர்வமாக உள்ளது.









If Sachin is God Of Cricket..


Then Sehwag is
.
Rajnikanth Of Cricket :D







Wednesday, December 7, 2011

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு -தமிழ் நாடு 


முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேசவைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் பலமாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு  நாள் தாங்கும் ? தங்கள்  இடத்திலேயே -தங்கள் செலவிலேயே  புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு  அதே அளவு  தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கிறோம் என்கிறார்களே.இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
  இது என்ன வீண் பிடிவாதம் ?இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -இவை எதுவுமே வெளிஉலகுக்குத் தெரியவில்லை.ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? – அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே  என்று தமிழர்களே கேட்கிறார்கள்.தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும்  கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில்தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி    விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக  நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக கீழே தருகிறேன்.முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவேபிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டிமுடித்தனர்.இதில் வேடிக்கை என்னவென்றால்,இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது  தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்குசொந்தமானது. அதை நிர்வகிப்பதும்  தமிழ் நாடு தான்.ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.அதிகாரம் செலுத்துவதும் அவர்களே ! இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன்மூலம் பாசனம் பெறும் நிலம் சுமார் 2,08,000 ஏக்கர்.மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும் 60 லட்சம் மக்கள்குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள். பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ? கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.  (104 அடி வரை டெட்ஸ்டோரேஜ் .)ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.கொள்ளளவு 70 டிஎம்சி.பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக்காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள்.  பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவேஇல்லை.அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிறகுரல் -கூக்குரல்.சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக  புதியஅணை கட்டுவதே தீர்வு ! புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?மேலே இருக்கும் பழைய அணையை  இடிப்பதால்,நீர்பிடிப்புபகுதியிலிருந்து அத்தனை  நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.அங்கே தான் இருக்கிறதுஅவர்கள் சாமர்த்தியம்.பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்துகுகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விடமுடியாது.நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு  பிறகு 5704அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து  பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. 

அணையைக் கட்டியபிறகு,இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம்உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பிருக்காது.தமிழ்நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது.ஆனால் பழைய அணைசுண்ணாம்பு அணை எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ? அயோக்கியத்தனம்.வடிகட்டிய அயோக்கியத்தனம்.
முதலாவதாக -பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு   கொள்ளளவுஉடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவேநிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்துதேவையான நீரை வெளியேற்றி விட   முடியும் ! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது. இரண்டாவதாக -1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.  1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள்.பயத்தைக் கிளப்பினார்கள்.சுப்ரீம் கோர்ட் வரைபோனார்கள்.2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.ஏற்கெனவேயே முதல் தடவையாக1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள்ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.
இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதிசெய்துகொண்டு 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?மீண்டும்சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.வழக்கம்போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்பரிசீலனையில்  இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள்.  அணைக்குஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று.பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.பந்த்நடத்துகிறார்கள்.இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.தமிழ் நாடு ஏமாந்தது போதும்.உடனடித்தேவை பலமான பதில் தாக்குதல்.தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும்.ஒரே குரலில் பேச வேண்டும்.உண்மையை  உரக்கச் சொல்ல வேண்டும்.அகிலஇந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்.நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி – சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் !நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படிசெய்ய வேண்டும்.கேரளாவிற்கு - எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும். எப்படிச் சொன்னால் புரியுமோ – அப்படிச் சொல்லவேண்டும்.நாடகமாடினால் இனியும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை  அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணை வரலாறு 






Tuesday, December 6, 2011

வைகோ வெளியிட்ட காணொளி

சிங்கள அரசின் தமிழின படுகொலை: 
அய்.நா.வின் மூவர் குழு அறிக்கை! 
வைகோ விளக்கம்





Saturday, November 12, 2011

500 ரூபாய்



200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க !!!

Saturday, November 5, 2011

WORLD'S EASIEST QUIZ



(Passing requires only 3 correct answers out of 10!)
1) How long did the Hundred Years' War last ?
2) Which country makes Panama hats ?
3) From which animal do we get cat gut ?
4) In which month do Russians celebrate the October Revolution ?
5) What is a camel's hair brush made of ?
6) The Canary Islands in the Pacific are named after what animal ?
7) What was King George VI's first name ?
8) What color is a purple finch ?
9) Where are Chinese gooseberries from ?
10) What is the color of the black box in a commercial airplane ?
Remember, you need only 3 correct answers to pass.
Check your answers below.



















ANSWERS
1) How long did the Hundred Years War last ?
116 years
2) Which country makes Panama hats ?
Ecuador
3) From which animal do we get cat gut ?
Sheep and Horses
4) In which month do Russians celebrate the October Revolution ?
November
5) What is a camel's hair brush made of ?
Squirrel fur
6) The Canary Islands in the Pacific are named after what animal ?
Dogs
7) What was King George VI's first name ?
Albert
8) What color is a purple finch ?
Crimson
9) Where are Chinese gooseberries from ?
New Zealand
10) What is the color of the black box in a commercial airplane ?
Orange (of course!)
What do you mean, you failed?!!
Me, too...!!!
(And if you try to tell me you passed, you lie!)